செய்திகள்
மின்சார ரெயில்

ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் நாளை இயங்கும்

Published On 2021-04-30 07:56 GMT   |   Update On 2021-04-30 07:56 GMT
முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமைகளில் 2 மணி நேரத்துக்கு ஒரு சேவை வீதம் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் 4 வழித்தடங்களிலும் குறைந்த அளவில் ரெயில்கள் இயக்கப்படுகிறது.

சென்னை:

கொரோனா பாதிப்பின் காரணமாக மின்சார ரெயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமைகளில் 2 மணி நேரத்துக்கு ஒரு சேவை வீதம் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் 4 வழித்தடங்களிலும் குறைந்த அளவில் ரெயில்கள் இயக்கப்படுகிறது.


நாளை மே தினத்தையொட்டி தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புறநகர் சிறப்பு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், சென்ட்ரல்- சூலூர்பேட்டை, கடற்கரை- செங்கல்பட்டு, கடற்கரை- வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் புறநகர் சிறப்பு ரெயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் பின்பற்றப்படும் கால அட்டவணைப்படி நாளை (சனிக்கிழமை) இயக்கப்படும் என்று சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News