ஆன்மிகம்
பாலமலை முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு

பாலமலை முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2021-02-05 09:08 GMT   |   Update On 2021-02-05 09:08 GMT
கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே பாலமலையில் உள்ள முருகன் கோவிலில் சுவாமிக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே பாலமலையில் உள்ள முருகன் கோவிலில் சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள், தொகுதி திருமஞ்சனம், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News