ஆட்டோமொபைல்
ஹோண்டா சிட்டி

பாதுகாப்பு சோதனையில் அசத்திய புதிய ஹோண்டா சிட்டி

Published On 2020-04-01 10:26 GMT   |   Update On 2020-04-01 10:26 GMT
ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிட்டி மாடல் கார் பாதுகாப்பு தர சோதனையில் அசத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



புதிய ஹோண்டா சிட்டி 2020மாடல் ASEAN NCAP தர சோதனையில் பாதுகாப்பிற்கு ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெற்று இருக்கிறது. ஹோண்டா சிட்டி தாய்லாந்திற்கான மாடலின் பயணிப்போர் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பிற்கு ஏற்றதாக உருவாக்கப்பட்டு இருக்கிறதா என சோதனை செய்யப்பட்டது.

தாய்லாந்திற்கான ஹோண்டா சிட்டி மாடலில் பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களுடன் சோதனை செய்யப்பட்டது. இவற்றில் ஜி ஃபோர்ஸ் கண்ட்ரோல், ஆறு ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, வெஹிகில் ஸ்டேபிலிட்டி அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எமெர்ஜன்சி ஸ்டாப் சிக்னல், மல்டி வியூ ரிவர்ஸ் கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



புதிய சிட்டி மாடலில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் காரின் முன்புறம், பக்கவாட்டு உள்ளிட்டவற்றில் சோதனை செய்யப்பட்டது. சோதனை முடிவுகளில் புதிய ஹோண்டா சிட்டி நூற்றுக்கு 86.54 புள்ளிகளை பெற்று இருக்கிறது. இதன் காரணமாக தாய்லாந்திற்கான ஹோண்டா சிட்டி மாடலுக்கு ஐந்து நடச்த்திர குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக மூன்று மற்றும் நான்காம் தலைமுறை ஹோண்டா சிட்டி மாடல்களுக்கு முறையே 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஐந்து நட்சத்திர குறியீடு வழங்கப்பட்டு இருக்கிறது. 

புதிய சிட்டி 2020 மாடல் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாய்லாந்து மாடலுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் புதிய சிட்டி மாடல் நீளமாகவும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

Similar News