செய்திகள்
தற்கொலை

கோட்டைப்பட்டினம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை

Published On 2021-10-12 11:42 GMT   |   Update On 2021-10-12 11:42 GMT
கோட்டைப்பட்டினம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோட்டைப்பட்டினம்:

கோட்டைப்பட்டினம் அருகே மீமிசலை அடுத்த கோபாலப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ராஜாமுகமது. இவரது மனைவி தாஜி நிஷா (வயது 39). இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தாஜி நிஷா தன் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். வலி தாங்க முடியாமல் தாஜி நிஷா அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையறிந்த மீமிசல் போலீசார் தாஜிநிஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News