செய்திகள்
தேவதானப்பட்டி அருகே பஸ் மோதி மனைவி கண் முன்னே கணவர் பலி
தேவதானப்பட்டி அருகே பைக் மீது பஸ் மோதிய விபத்தில் மனைவி கண் முன்னே கணவர் பலியானார்.
தேவதானப்பட்டி:
தேனி அரண்மனைப் புதூரைச் சேர்ந்தவர் சுருளிநாதன் (வயது 49). இவர் தனது மனைவி வளர்மதியுடன் மோட்டார் சைக்கிளில் ஜெயமங்கலம் நால்ரோடு பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பெரியகுளத்தில் இருந்து தேவதானப்பட்டிக்கு வந்த தனியார் பேருந்து இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் சுருளிநாதன் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த வளர்மதி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது போலீசார் தனியார் பஸ் டிரைவர் கோபிநாத் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.