செய்திகள்
கோப்புப்படம்

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 238 பேருக்கு கொரோனா

Published On 2021-04-21 20:33 GMT   |   Update On 2021-04-21 20:33 GMT
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றிலிருந்து 244 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சிகிச்சை பலனின்றி ஒரு பெண் பலியானார்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்று குறைந்தபாடில்லை. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 973-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 244 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 506-ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் 2 ஆயிரத்து 234 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திருப்பூரை சேர்ந்த 60 வயது பெண் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். தற்போது பலி எண்ணிக்கை மாவட்டத்தில் 233-ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
Tags:    

Similar News