செய்திகள்
தேவர்குளம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்து மூதாட்டி பலி
தேவர்குளம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்து மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
தேவர்குளம் அருகே உள்ள கூவாச்சிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லசாமி. இவரது மனைவி பழனிதாய் (வயது 62). இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் இவரை மோட்டார் சைக்கிளில் அமரவைத்து, அவரது பேரன் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். தேவர்குளம் அருகே சென்ற போது, மயக்கம் அடைந்த பழனிதாய், மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிகீழே விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று பழனிதாய் இறந்தார். இதுகுறித்து தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.