செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 70 பேர் பாதிப்பு

Published On 2021-07-19 11:28 GMT   |   Update On 2021-07-19 11:28 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 70 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 70 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 12 ஆயிரத்து 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 32 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 791 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மாவட்டம் முழுவதும் ஒருவர் இறந்துள்ள நிலையில், இதுவரையில் 1,739 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர்.
Tags:    

Similar News