செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.24 லட்சம் தங்கம் பறிமுதல்

Published On 2021-07-06 18:45 GMT   |   Update On 2021-07-06 18:45 GMT
சார்ஜாவில் இருந்து உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்த ரூ.24 லட்சம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் இறங்கி வந்த பயணிகளை கண்காணித்தனர். விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனா். அப்போது திருவாரூரை சோ்ந்த கலையரசன் கருணாநிதி (வயது 31) என்பவரை சந்தேகத்தின் பேரில், நிறுத்தி விசாரித்தனர்.

அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் சிக்காததால், தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனா்.

இதையடுத்து ஆடையில் பதுக்கி வைத்த ரூ.24 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 495 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக கலையரசன் கருணாநிதியை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அப்போது அவர், சார்ஜாவில் இருந்த ஒருவர் தன்னிடம் தங்கத்தை தந்து அனுப்பி வைத்ததாக அவர் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News