செய்திகள்
சென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு அதிமுக அரசு வீடுகட்டிக் கொடுக்கும்: முதல்வர் பழனிசாமி
சென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு அதிமுக அரசு வீடுகட்டிக் கொடுக்கும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் ‘‘எம்.ஜி.ஆர் பெயரை உச்சரித்தால்தான் கட்சி தொடங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆலமரம் போல பரந்து விரிந்து, அதிமுக நன்மையையே வழங்கி வருகிறது.
சென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு அதிமுக அரசு வீடுகட்டிக் கொடுக்கும். அதிமுக சட்டத்தின் கட்சி. நில அதிகரிப்பு, கட்டப் பஞ்சாயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அரசு. அதிமுக-வை வெல்லும் சக்தி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இல்லை. ஊழலால் கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி. அதிமுக அரசின் மீது வேண்டுமென்றே பழி சுமத்துகிறார் ஸ்டாலின்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.