செய்திகள்
தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலை காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-09-24 13:01 GMT   |   Update On 2021-09-24 13:01 GMT
கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலை காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாத்தபாளையம் கிராமத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்றுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு பாதுகாவலராக சென்னை மேடவாக்கம் மூவேந்தர் தெருவை சேர்ந்த மோகன் (வயது 38) என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி தேவி செல்வமணி (34) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் தொழிற்சாலை வளாகத்தில் மோகன் துணியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரதி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் சந்தேக சாவாக வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News