செய்திகள்
விருதுநகர் அருகே வீட்டில் நகை, பணம் திருட்டு
விருதுநகர் அருகே வீட்டில் நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் குல்லூர்சந்தை ரோட்டில் வசிப்பவர் நாகேந்திரன் (வயது 61). பார்வை குறைபாடு உள்ள இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டு அலமாரியில் இருந்த 5 கிராம் மோதிரமும், ரூ.3,100-ம் திருட்டு போய் விட்டது. இதுபற்றி நாகேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.