செய்திகள்
வேலை வாங்கி தருவதாக ரூ.9 லட்சம் மோசடி: கணவன்-மனைவி தலைமறைவு
தண்டையார்பேட்டையில் வேலை வாங்கி தருவதாக ரூ.9 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவி தலைமறைவான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயபுரம்:
தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் பொதுடில்லி வெங்கடேசுவரன். இவரது மனைவி பொது அருணாஜோதி. இவர்கள் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்தனர். இவர்களிடம் தண்டையார்பேட்டை வரதராஜ பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது உறவினரின் ரெயில்வே வேலைக்காக இவர்களிடம் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.9 லட்சம் கொடுத்தார்.
ஆனால் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இந்த நிலையில் அவர்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். இவர்களது நிறுவன மேலாளர் பாபுஷியாம் என்பவரும் மாயமாகிவிட்டார். இது குறித்து தண்டையார்பேட்டை போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் பொதுடில்லி வெங்கடேசுவரன். இவரது மனைவி பொது அருணாஜோதி. இவர்கள் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்தனர். இவர்களிடம் தண்டையார்பேட்டை வரதராஜ பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது உறவினரின் ரெயில்வே வேலைக்காக இவர்களிடம் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.9 லட்சம் கொடுத்தார்.
ஆனால் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இந்த நிலையில் அவர்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். இவர்களது நிறுவன மேலாளர் பாபுஷியாம் என்பவரும் மாயமாகிவிட்டார். இது குறித்து தண்டையார்பேட்டை போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.