செய்திகள்
அமித்ஷா

புதுச்சேரியில் அடுத்து பா.ஜ.க. அணியின் ஆட்சி அமையும்- அமித்ஷா

Published On 2021-02-28 08:32 GMT   |   Update On 2021-02-28 08:32 GMT
புதுச்சேரியில் மத்திய அரசின் திட்டங்கள் எதையும் காங்கிரஸ் செயல்படுத்தவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
காரைக்கால்:

காரைக்காலில் இன்று பாஜக பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:-

* காங்கிரஸில் குடும்ப ஆட்சியே நடைபெறுகிறது. இந்தியாவில் இருந்தே காங்கிரஸ் கட்சி காணாமல் போகும்.

* ஊழலை மட்டுமே வளர்த்தது நாராயணசாமி தலைமையிலான அரசு. புதுச்சேரியில் மத்திய அரசின் திட்டங்கள் எதையும் காங்கிரஸ் செயல்படுத்தவில்லை.

* புதுச்சேரியில் அடுத்து பா.ஜ.க. அணியின் ஆட்சி அமையும்.

* உலகின் உன்னதமான மூத்த மொழியான தமிழில் பேச முடியவில்லையே என வருத்தப்படுகிறேன்.

* பிரதமர் மோடி தமிழ் கற்றுக்கொண்டு பேச ஆசைப்படுகிறார்; நானும் தமிழ் கற்றுக்கொண்டு பேசுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News