செய்திகள்
புதுச்சேரியில் அடுத்து பா.ஜ.க. அணியின் ஆட்சி அமையும்- அமித்ஷா
புதுச்சேரியில் மத்திய அரசின் திட்டங்கள் எதையும் காங்கிரஸ் செயல்படுத்தவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
காரைக்கால்:
காரைக்காலில் இன்று பாஜக பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:-
* காங்கிரஸில் குடும்ப ஆட்சியே நடைபெறுகிறது. இந்தியாவில் இருந்தே காங்கிரஸ் கட்சி காணாமல் போகும்.
* ஊழலை மட்டுமே வளர்த்தது நாராயணசாமி தலைமையிலான அரசு. புதுச்சேரியில் மத்திய அரசின் திட்டங்கள் எதையும் காங்கிரஸ் செயல்படுத்தவில்லை.
* புதுச்சேரியில் அடுத்து பா.ஜ.க. அணியின் ஆட்சி அமையும்.
* உலகின் உன்னதமான மூத்த மொழியான தமிழில் பேச முடியவில்லையே என வருத்தப்படுகிறேன்.
* பிரதமர் மோடி தமிழ் கற்றுக்கொண்டு பேச ஆசைப்படுகிறார்; நானும் தமிழ் கற்றுக்கொண்டு பேசுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
காரைக்காலில் இன்று பாஜக பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:-
* காங்கிரஸில் குடும்ப ஆட்சியே நடைபெறுகிறது. இந்தியாவில் இருந்தே காங்கிரஸ் கட்சி காணாமல் போகும்.
* ஊழலை மட்டுமே வளர்த்தது நாராயணசாமி தலைமையிலான அரசு. புதுச்சேரியில் மத்திய அரசின் திட்டங்கள் எதையும் காங்கிரஸ் செயல்படுத்தவில்லை.
* புதுச்சேரியில் அடுத்து பா.ஜ.க. அணியின் ஆட்சி அமையும்.
* உலகின் உன்னதமான மூத்த மொழியான தமிழில் பேச முடியவில்லையே என வருத்தப்படுகிறேன்.
* பிரதமர் மோடி தமிழ் கற்றுக்கொண்டு பேச ஆசைப்படுகிறார்; நானும் தமிழ் கற்றுக்கொண்டு பேசுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.