ஆன்மிகம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி திருவிழா ரத்து
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடக்க இருந்த ஆவணி அஸ்வதி திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கில் சில தளர்வுக்கு பிறகு கடந்த 1-ந் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டது. 5 மாதங்களுக்கு பிறகு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். எனினும் கோவிலில் திருவிழா நடத்த அனுமதி அளிக்கவில்லை.
இதனால் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடக்க இருந்த ஆவணி அஸ்வதி திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், விழா நாட்களில் நடக்கும் சுமங்கலி பூஜை, பொங்கல் வழிபாடு மற்றும் திருவிளக்குபூஜை ஆகிய அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக கோவில் மேலாளர் ஆறுமுகதரன் தெரிவித்துள்ளார்.
அதே சமயத்தில், கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறும்.
இதனால் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடக்க இருந்த ஆவணி அஸ்வதி திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், விழா நாட்களில் நடக்கும் சுமங்கலி பூஜை, பொங்கல் வழிபாடு மற்றும் திருவிளக்குபூஜை ஆகிய அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக கோவில் மேலாளர் ஆறுமுகதரன் தெரிவித்துள்ளார்.
அதே சமயத்தில், கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறும்.