செய்திகள்
ராணிப்பேட்டை

உள்ளாட்சி தேர்தல்- ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2648 பேர் மனுதாக்கல்

Published On 2021-09-23 04:47 GMT   |   Update On 2021-09-23 04:47 GMT
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2648 உள்ளாட்சி பதவிகள் உள்ளன. அதற்கு 7651 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை:

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற்றுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2648 உள்ளாட்சி பதவிகள் உள்ளன. அதற்கு 7651 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். 13 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 95 பேரும், 127 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 684 பேரும், 288 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 1247 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் 2220 பதவிக்கு 5634 பேரும் மனுதாக்கல் செய்துள்ளனர்.
Tags:    

Similar News