செய்திகள்
காஞ்சிபுரத்தில் மணல் கடத்திய 2 பேர் கைது
காஞ்சிபுரத்தில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்றில் இருந்து லாரியில் அரசு அனுமதியின்றி மணல் கடத்தப்படுப்படுவதாக காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி சப்- இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் தலைமையில் போலீசார் செவிலிமேடு ஜங்சன் என்ற இடத்திற்கு சென்றனர்.
லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அரசு அனுமதியின்றி மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து லாரி டிரைவர் திருவண்ணாமலை மாவட்டம், வடகல்பாக்கத்தை சேர்ந்த தியாகராஜ், செவிலிமேடு பகுதியை சேர்ந்த ஏழுமலை ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். லாரி உரிமையாளரை தேடி வருகிறார்கள்.