செய்திகள்
கோப்பு படம்.

நெல்லையில் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி பலி

Published On 2020-11-22 14:18 GMT   |   Update On 2020-11-22 14:18 GMT
நெல்லையில் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி பரிதாபமாக இறந்தாள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை:

நெல்லை சந்திப்பு வடக்கு பாலபாக்ய நகரை சேர்ந்தவர் என்ஜினீயர் ஷியாம் ஜோயல். இவருடைய மகள் ஆக்சி பிரபா (வயது 3) . இவர்களது உறவினர் வீடு பாளையங்கோட்டை பெருமாள்புரம் திருநகர் வள்ளுவர் நகரில் உள்ளது. அங்கு ஷியாம் ஜோயல் குடும்பத்தினருடன் சென்றிருந்தார். நேற்று முன்தினம் மாலையில் ஆக்சி பிரபா உறவினர் வீட்டு வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். 

சிறிது நேரம் கழித்து ஆக்சி பிரபாவை மட்டும் காணவில்லை. அப்போது அவள் அங்குள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி தத்தளிப்பதை கண்டனர். உடனடியாக அவர்கள் ஆக்சி பிரபாவை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News