திட்டக்குடி அருகே 2 கோவில்களில் கொள்ளை
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே செங்கமேடு கிராமத்தில் சாலை ஓரம் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவிலில் நேற்று இரவு வழக்கம் போல் கோயில் பூசாரி சுப்பிரமணியன் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
இன்று அதிகாலை வழக்கம் போல் கோயிலுக்கு வந்தபோது கோவில் பூட்டு உடைத்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது கோயில் உள்புறம் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல் ஆறு மாதத்துக்கு ஒரு முறை திறப்பது வழக்கம் இந்நிலையில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது அதில் இருந்த 40 ஆயிரம் பணம் திருடு போயுள்ளது.
மேலும் இதுகுறித்து ஆவினங்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் பேரில் வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல் செங்கமேடு அருகே உள்ள கொட்டாரம் கிராமத்தில் கொட்டாரம் , வையங்குடி செல்லும் சாலை யோரம் உள்ள பெருமாள் கோவிலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
இதுகுறித்து ஆவினங்குடி போலீசார் விசாரணை மேற் கொண்டுள்ளனர். அருகில் உள்ள 2 கிராமங்களில் அடுத்தடுத்து கோவில் உண்டியலை உடைத்து திருடு போன சம்பவம் பொதுமக் களிடையே பெரும் பரபரப்பாக ஏற்படுத்தியுள்ளது.