செய்திகள்

குடும்ப தகராறில் கணவரை கொடூரமாக கொன்ற மனைவி

Published On 2019-06-15 05:16 GMT   |   Update On 2019-06-15 05:16 GMT
அரியலூர் அருகே குடும்ப தகராறில் கணவரை கொடூரமாக கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கீழ மாளிகை காலனி தெருவை சேர்ந்தவர் ராமு (வயது 60) தொழிலாளி. இவரது மனைவி அசலம்பாள்(55), மனநிலை பாதிக்கப்பட்டவர். நேற்று அப்பகுதியில் உள்ள கோவிலில் திருவிழா நடைபெற்றது. அதில் பங்கேற்று விட்டு இரவு ராமு வீட்டிற்கு வந்து படுத்து தூங்கினார்.

அவர் தூங்கிய சிறிது நேரத்தில் திடீரென எழுந்த அசலம்பாள் வீட்டில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து ராமுவை சரமாரி தாக்கினார். இதில் ராமு பலத்த காயமடைந்து தூங்கிய நிலையிலேயே துடிதுடித்து இறந்தார்.

இதையடுத்து உடலில் ரத்தம் படிந்த கறையுடன் கோவிலுக்கு சென்ற அசலம்பாளை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரிடம் நடந்த விவரத்தை கேட்டறிந்தனர். அப்போது ராமு கொலை செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து இரும்புலிக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து , ராமுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராமுவை கொன்ற அசலம்பாளை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், குடும்ப தகராறில் அவர் கணவரை கொலை செய்தது தெரியவந்தது. மேலும் கொலை செய்ததும் கோவிலுக்கு சென்ற அசலம்பாள், 30 வருட பகையை தீர்த்து விட்டேன் என்றுகூறி சூடம் ஏற்றி வழிபட்டுள்ளார். அசலம்பாளிடம் போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News