செய்திகள்
கேரளாவில் இன்று புதிதாக 4,070 பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் இன்று புதிதாக 4,070 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4,345 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள்தான். இந்த இரண்டு மாநிலங்களில்தான் தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இன்னும் 4 ஆயிரத்தை தாண்டிய வகையில் உள்ளது.
கேரளா மாநிலத்தில் இன்று புதிதாக 4,070 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆறுதல் அளிக்கும் விதமாக 4,345 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது வரை 58,313 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9,71,975 பேர் குணமடைந்துள்ளனர்.