செய்திகள்
குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

ராஜாக்கமங்கலம் அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

Published On 2019-10-24 13:35 GMT   |   Update On 2019-10-24 13:35 GMT
ராஜாக்கமங்கலம் அருகே கரையில் அமர்ந்து மது குடித்த வாலிபர் குளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
ராஜாக்கமங்கலம்:

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள அண்ணா காலனியைச் சேர்ந்தவர் ஜவகர் (வயது 35). இவர் தனது நண்பர்கள் சிலருடன் தியேட்டருக்கு சினிமா பார்க்கச் சென்றார். வழியில் அவர்கள் நிலவடிகுளம் கரையில் அமர்ந்து மது குடித்தனர். 

அப்போது எதிர்பாராதவிதமாக ஜவகர் குளத்தில் விழுந்து உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். 

இது குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News