செய்திகள்
விபத்து

கடலூர் முதுநகர் அருகே சாலை விபத்தில் பெட்டிக்கடைக்காரர் பலி

Published On 2020-11-21 07:03 GMT   |   Update On 2020-11-21 07:03 GMT
கடலூர் முதுநகர் அருகே சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்த பெட்டிக்கடைக்காரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர் முதுநகர்:

கடலூர் முதுநகர் அருகே உள்ள அன்னவெளி சீதகுப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுகுமார், (வயது 52). இவர் அதேஊரில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று சுகுமார் ஒரு மோட்டார் சைக்கிளில் விருத்தாசலம் நோக்கி புறப்பட்டார். 

விருத்தாசலம் சாலையில் சென்றபோது, முன்னாள் சென்ற காரை ஓட்டிச் சென்ற டிரைவர், காரை திடீரென பிரேக் போட்டு நிறுத்தியதோடு, முன்பக்க கதவை சட்டென திறந்தார். அந்த சமயத்தில் பின்னால் வந்த சுகுமார் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சுகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News