செய்திகள்
சீர்காழி அருகே 300 கிலோ ராட்சத திருக்கை சிக்கியது
சீர்காழி அடுத்த பழையார் பகுதியில் மீனவர் விரித்த வலையில் 300 கிலோ ராட்சத திருக்கை சிக்கியது.
சீர்காழி:
சீர்காழி அடுத்த பழையார் பகுதியை சேர்ந்தவர் பச்சைகோட்டையன். இவர் நேற்று காலை கடலுக்கு சென்று வலைவிரித்தபோது அவரது வலையில் அதிக எடைக்கொண்ட மீன் சிக்கியது. அதனை மற்ற மீனவர்கள் உதவியுடன் மிகுந்த சிரமத்துடன் பழையார் துறைமுகம் பகுதிக்கு கொண்டு வந்து வலையை பிரித்து பார்த்துள்ளனர்.
அதில் ராட்சத திருக்கை மீன் இருந்தது. இந்த மீன் சுமார் 300கிலோ எடையுடன் இருந்தது. பழையார் பகுதியில் பல ஆண்டுகளுக்கு பிறகு அதிக எடைக்கொண்ட திருக்கை மீன் சிக்கியுள்ளது குறிப்பிடதக்கது.
சீர்காழி அடுத்த பழையார் பகுதியை சேர்ந்தவர் பச்சைகோட்டையன். இவர் நேற்று காலை கடலுக்கு சென்று வலைவிரித்தபோது அவரது வலையில் அதிக எடைக்கொண்ட மீன் சிக்கியது. அதனை மற்ற மீனவர்கள் உதவியுடன் மிகுந்த சிரமத்துடன் பழையார் துறைமுகம் பகுதிக்கு கொண்டு வந்து வலையை பிரித்து பார்த்துள்ளனர்.
அதில் ராட்சத திருக்கை மீன் இருந்தது. இந்த மீன் சுமார் 300கிலோ எடையுடன் இருந்தது. பழையார் பகுதியில் பல ஆண்டுகளுக்கு பிறகு அதிக எடைக்கொண்ட திருக்கை மீன் சிக்கியுள்ளது குறிப்பிடதக்கது.