செய்திகள்
கேரளாவில் மாலை 5 மணி நிலவரப்படி 68.92 சதவீத வாக்குகள் பதிவு
கேரள மாநிலத்தில் 140 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் 30 தொகுதிகளுக்கும், கேரள மாநிலத்தில் 140 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
கேரளாவில் மாலை 5 மணி நிலவரப்படி 68.92 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கோழிக்கோட்டில் 72.90 சதவீத வாக்குகளும், கண்ணூரில் 71.46 சதவீத வாக்குகளும், ஆலப்புழாவில் 68.98 சதவீத வாக்குகளும், எர்ணாகுளத்தில் 70.21 சதவீத வாக்குகளும், திருவனந்தபுரத்தில் 64.44 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.