இந்தியா
ஆந்திராவில் 3 பெண் மாவோயிஸ்டுகள் கைது - வெடிபொருள் பறிமுதல்
கைது செயப்பட்ட பெண் மாவோயிஸ்ட்களிடம் இருந்து நில கண்ணிவெடிகள் நிரப்பப்பட்ட வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாகப்பட்டினம்:
ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் மம்பா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த பாரதி, சங்கீதா, சீதா என்ற 3 பெண் மாவோயிஸ்டுகளை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் பல தாக்குதல்களை நடத்தியவர்கள் என தெரிய வந்துள்ளது.
மேலும், அவர்களிடம் இருந்து 2 கிலோ எடை கொண்ட நில கண்ணிவெடிகள் நிரப்பப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் 6 டெட்டனேட்டர்கள் உள்பட பல வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பாரதியை பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ.4 லட்சமும், சங்கீதா மற்றும் சீதாவை பற்றி தகவல் தருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத்தொகை அறிவித்திருந்தது.
இதையும் படியுங்கள்...கோரக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி