செய்திகள்
தற்கொலை (கோப்புப்படம்)

செல்போன் உடைந்ததை கணவர் கேட்டதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2019-11-21 11:31 GMT   |   Update On 2019-11-21 11:31 GMT
கோவையில் செல்போன் உடைந்ததை கணவர் கேட்டதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை பொள்ளாச்சி ரோடு காந்தி நகரைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 31). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தந்தைக்கு பணம் கொடுத்துள்ளார்.

அதை திருப்பிக் கேட்டபோது அவர் 10 நாட்களில் திருப்பித் தருவதாக கூறினார். இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜேஸ்வரி மீண்டும் தனது தந்தையிடம் பணத்தை கேட்பதற்காக செல்போன் மூலம் தொடர்பு கொண்டார்.

ஆனால் அவரது தந்தை போனை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி செல்போனை தூக்கி எறிந்து உடைத்தார். இதை கண்ட அவரது கணவர் நாகராஜ் இதுகுறித்து கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி அறையில் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை வடவள்ளி வீரகேரளத்தைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 57). தொழிலாளி. சில வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி இறந்துவிட்டார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஒருவரை காதலித்து திருமணம் செய்து ஜெயச்சந்திரனை விட்டு சென்றதாகவும், 2-வது மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனவேதனையுடன் காணப்பட்ட அவர் சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News