செய்திகள்
பலியான செந்தில்குமார்.

வெள்ளகோவிலில் விபத்தில் காயமடைந்த தொழிலாளி பலி

Published On 2021-11-30 07:30 GMT   |   Update On 2021-11-30 07:30 GMT
பச்சாகவுண்டன் வலசு பிரிவு அருகே செல்லும் போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் செந்தில்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
வெள்ளகோவில்:

வெள்ளகோவில் அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் செந்தில்குமார் (வயது 32). இவரும் அவரது உறவினருமான முருகேசன் (50) என்பவரும் மொபட்டில் தாசநாயக்கன்பட்டிக்கு சென்றனர்.

பச்சாகவுண்டன் வலசு பிரிவு அருகே செல்லும் போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் செந்தில்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. முருகேசனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் செந்தில்குமாரை மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை தலைமை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் இறந்தார். 

இறந்துபோன செந்தில்குமாருக்கு செல்வி என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News