செய்திகள்
பஞ்சாப் கட்டிட விபத்தில் சிக்கி 4 பேர் பலி - முதல் மந்திரி நிதி உதவி அறிவிப்பு
பஞ்சாப் மாநிலத்தின் மொகாலியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தின் மொகாலியில் உள்ள தேரா பஸ்சி பகுதியில் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. விபத்து காரணமாக இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்த தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆகியோர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
கட்டிட விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி அம்ரீந்தர் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் இறந்தோர் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.