உள்ளூர் செய்திகள்
பாதுகாப்பு பணியில் போலீசார்

பாபர் மசூதி இடிப்பு தினம்: சென்னையில் பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார் குவிப்பு

Published On 2021-12-06 02:33 GMT   |   Update On 2021-12-06 02:33 GMT
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில் நிலைங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கேரளா சபரிமலையில் பம்பை முதல் சன்னிதானம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்புப்படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்னர். அங்காங்கே சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு போலீசார் காண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News