உள்ளூர் செய்திகள்
தீயை அணைப்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்த காட்சி.

திருப்பூர் ரெயில் நிலையத்தில் தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2021-12-07 08:21 GMT   |   Update On 2021-12-07 08:21 GMT
தீத்தடுப்பு கருவியை கையாளும் வழிமுறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையம் மற்றும் ரெயில்வே போலீசார் சார்பில் திருப்பூர் ரெயில் நிலைய வளாகத்தில் இன்று தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வடக்கு தீயணைப்பு நிலைய அதிகாரி பாஸ்கரன் தலைமை தாங்கினார்.

தீயணைப்பு வீரர்கள் மற்றும் ரெயில்வே போலீசார் கலந்து கொண்டனர். இதில் தீயணைப்பு வீரர்கள், தீ விபத்து ஏற்பட்டால் அதனை எப்படி அணைப்பது என்பது குறித்து விளக்கம் அளித்தனர்.

கியாஸ் சிலிண்டரில் கசிவு  ஏற்பட்டால் அதனை எப்படி கையாள்வது, வீடு, ரெயில், நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அங்கு வைக்கப்பட்டிருக்கும் தீத்தடுப்பு  கருவியை கையாளும் வழிமுறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News