செய்திகள்
சீர்காழியில் அண்ணனை ஸ்குரு டிரைவரால் தாக்கிய தம்பி கைது
சீர்காழியில் தனிகுடித்தனம் செல்லுமாறு கூறியதால் அண்ணனை ஸ்குரு டிரைவரால் தாக்கிய தம்பி கைது செய்யப்பட்டார்.
சீர்காழி:
சீர்காழி மேல மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய்பாபு (வயது28). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் விஜய்பாபுவை தனிகுடித்தனம் செல்லுமாறு இவரது அண்ணன் வினோத் குமார்(30) கூறி வந்தார்.
இது தொடர்பாக நேற்று அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி விஜய்பாபு ஆத்திரம் அடைந்து ஸ்குரு டிரைவரால் வினோத்குமாரை குத்தினார். இதில் வினோத்குமார் காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ் பெக்டர் ராஜா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விஜய்பாபுவை கைது செய்தனர்.