செய்திகள்
அகர்வால்

டெல்லி அணிக்கு 167 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப்

Published On 2021-05-02 16:19 GMT   |   Update On 2021-05-02 16:19 GMT
டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை எடுத்துள்ளது.
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய 29-வது ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் 99 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். 

டெல்லி தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளும், ஆவேஸ் கான், அக்சர் படேல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி ஆடி வருகிறது.

Tags:    

Similar News