ஆன்மிகம்
புஷ்ப பல்லக்கில் கள்ளழகர்

அழகர்கோவில் சித்திரை திருவிழா கோவில் உள் பிரகாரத்தில் புஷ்ப பல்லக்கில் கள்ளழகர்

Published On 2021-04-30 07:51 GMT   |   Update On 2021-04-30 07:51 GMT
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவின் 8-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளினார்.
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவின் 8-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளினார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சித்திரை திருவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஆகம விதிப்படி கோவில் உள் பிரகாரத்தில் நடந்து வருகிறது.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திரு விழாவில் கள்ளழகர் மதுரை வருகை தந்து வைகை ஆற்றில் எழுந்தருளி பின் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்த பின் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவு பெற்று மதுரை மக்களிடம் இருந்து விடைபெற்று அழகர்கோவில் செல்வதற்கு முன்பாக தமுக்கம் மைதா னம் அருகே உள்ள கருப்பணசாமி கோவில் முன்பு இந்த பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

ஆனால் கடந்த 2 ஆண்டு களாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சித்திரைத் திருவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் கோவிலுக்குள் நடைபெற்று வருகிறது.

அதன்படி இன்று 8-ம் நாள் நிகழ்ச்சியாக பக்தர்கள் அனுமதியின்றி இன்று கள்ளழகர் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினார்.
Tags:    

Similar News