இந்தியா
கோப்புப் படம்

ஜம்மு காஷ்மீர் - ஸ்ரீநகர் என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

Published On 2021-12-31 03:29 GMT   |   Update On 2021-12-31 03:29 GMT
ஜம்மு காஷ்மீரில் கடந்த இரு தினங்களில் 9 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து நள்ளிரவில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

தேடுதல் வேட்டை நடத்தியபோது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர். மேலும் 4 போலீசார் காயமடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் அனந்தநாக் மற்றும் குர்காம் மாவட்டத்தில் நடந்த தேடுதல் வேட்டையின்போது 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News