ஆன்மிகம்
சீனிவாச பெருமாள்

திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு இன்று அனுமதி இல்லை

Published On 2021-09-18 05:53 GMT   |   Update On 2021-09-18 05:53 GMT
தமிழக அரசின் தடை உத்தரவை தொடர்ந்து திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் பூஜையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே உள்ள திருவண்ணாமலையில் மலை மீது சீனிவாச பெருமாள் உள்ளது. இங்குள்ள பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் லட்சக்கணக்கில் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.

இந்த ஆண்டு வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும். ஆனால் தமிழக அரசின் தடை உத்தரவை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) நடைபெறும் பூஜையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை வழக்கம்போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News