செய்திகள்
ரங்கசாமி

என்.ஆர், காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஏனாம் தொகுதியில் தோல்வி

Published On 2021-05-02 14:24 GMT   |   Update On 2021-05-02 14:24 GMT
என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஏனாம் தொகுதியில் தோல்வியடைந்த நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதியில் முன்னிலை பெற்று வருகிறார்.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா, அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. இந்த கூட்டணி வெற்றி பெற்றால் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரங்கசாமி ஏனாம், தட்டாஞ்சாவடி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஏனாம் தொகுதியில் ரங்கசாமி அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்தார்.

இறுதி சுற்றான 15-வது சுற்று முடிவில் ரங்கசாமி 16,228 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் கொல்லபள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் 16,874 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

தட்டாஞ்சாவடியில் 12,646 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். சிபிஐ வேட்பாளர் சேது 7,355 வாக்குகள் பெற்றுள்ளார்.
Tags:    

Similar News