உள்ளூர் செய்திகள்
கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 395 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

Published On 2022-01-29 06:46 GMT   |   Update On 2022-01-29 06:46 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் 18 வயதிலிருந்து 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதில் முதன்மை இடத்தை வகித்தாலும் இரண்டாவது தவணை தடுப்பூசியில் 81 சதவீதம் என்ற குறைந்த அளவு இலக்கையே எட்டியுள்ளது.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கொரோனா மற்றும் அதைச் சார்ந்த ஒமைக்ரான் நோயைத் தடுப்பதற்காக 15 வயதிலிருந்து 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி இன்று (சனிக்கிழமை) மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் 18 வயதிலிருந்து 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதில் முதன்மை இடத்தை வகித்தாலும் இரண்டாவது தவணை தடுப்பூசியில் 81 சதவீதம் என்ற குறைந்த அளவு இலக்கையே எட்டியுள்ளது.

இதுவரை 1,97,789 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாத நிலையில் உள்ளனர்.

எனவே பயனாளிகளை நேரிடையாக தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டும், மாவட்ட மற்றும் வட்டார அளவில் குறுஞ்செய்தி அனுப்பியும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 395 மாபெரும் தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி அனைவரும் தடுப்பூசி போட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News