செய்திகள்
கைது

பாபநாசத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது

Published On 2020-03-20 09:40 GMT   |   Update On 2020-03-20 09:40 GMT
பாபநாசத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாபநாசம்:

பாபநாசம் காணியாளதெருவில் வசித்து வருபவர் ராஜகோபாலசுவாமி (வயது42). இவர் புதிய பேருந்து நிலையம் முன்பு பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று பாபநாசம் குப்பைமேடு பகுதியை சேர்ந்த வினோத்குமார் (26), சாமுவேல் ஆகிய இருவரும் சேர்ந்து பெட்டிக்கடையில் உள்ள பாட்டில்களை உடைத்து ராஜகோபால்சாமியை கத்தியை காட்டி மிரட்டி அவடமிருந்து பணத்தை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து ராஜகோபாலசாமி கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துர்கா வழக்கு பதிவு செய்து வாலிபர் வினோத்குமார் கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்ட்ரேட் சிவகுமார் 15 காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் தலைவரான சாமுவேலை போலீசார் தேடி வருகின்றனர்

Tags:    

Similar News