செய்திகள்
சமத்துவ பொங்கல் விழா

தூத்துக்குடி மகிளா காங்கிரஸ் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

Published On 2020-01-14 10:27 GMT   |   Update On 2020-01-14 10:27 GMT
தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடி ஜெயலானி காலனி மகிளா காங்கிரஸ் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி:

தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடி ஜெயலானி காலனி மகிளா காங்கிரஸ் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி முத்துவிஜயா தலைமை வகித்தார். இதில் கரும்பு, அச்சிவெள்ளம், பொங்கபானையில் புதுஅரிசி இட்டு சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இதில் எஸ்.டி.சி. கன்னியம்மாள் மகிளா காங்கிரஸ் மாநில துணை தலைவி முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் உமா ஒயிட்டின் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக வசந்தகுமார் எம்.பி. மற்றும் மாநில காங்கிரஸ் கமிட்டி செயல்தலைவர் முரளிதரன், மாநகர் மாவட்ட தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாநகர துணை தலைவர் ஏ.டி.பிரபாகரன், மாநகர மாவட்ட செயலாளர் கோபால், வர்த்தக காங்கிரஸ் வட்டார தலைவர் செந்தூர்பாண்டி, செயலாளர் ஏசுதாஸ், திருமணி முத்துக்குட்டி, வில்பிரட் சந்திரசேகர், நேரு, சண்முகசுந்தரம், இளைஞர் காங்கிரஸ் ஜெயமணி சுரேஷ், ஜெயபிரகாஷ், மாவட்ட தலைவி சாந்தி மேரி, மகராசி, காயத்ரி, சுகுணா, உமா, கற்பகவள்ளி, சண்முகத்தாய், மாரியம்மாள், லட்சுமி, மாரிச்செல்வி, பாப்பா, ராமலட்சுமி மற்றும் ஏராளமான மகிளா காங்கிரஸ் பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News