செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு- மத்திய அரசு

Published On 2021-05-11 09:21 GMT   |   Update On 2021-05-11 09:21 GMT
உலக நாடுகளிடம் இருந்து இதுவரை 3.4 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகள் இந்தியா வந்துள்ளன.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,29,92,517 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,29,942 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 3,876 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,49,992 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,90,27,304 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 3,56,082 பேர் குணமடைந்துள்ளனர்.



இந்நிலையில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் கூறுகையில், உலக நாடுகளிடம் இருந்து இதுவரை 3.4 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகள் இந்தியா வந்துள்ளன.

இந்தியாவில் 61 நாட்களுக்குப்பின், கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News