செய்திகள்
பூந்தொட்டியில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது
பூந்தொட்டியுடன் கஞ்சா செடியை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி (வயது 25). இவரது வீட்டின் பின்புறம் குளிக்கும் இடத்தில் பிளாஸ்டிக் குடத்தை வெட்டி பூந்தொட்டி போன்று மாற்றி, அதில் ஒரு கஞ்சா செடியை வைத்து வீரமணி வளர்த்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் வீரமணி வீட்டிற்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அவர் கஞ்சா செடி வளர்த்தது, தெரியவந்தது. சுமார் 5 அடி உயரத்திற்கு வளர்ந்துள்ள அந்த செடி, 4 மாதமாக வளர்க்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் பூந்தொட்டியுடன் கஞ்சா செடியை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.
இதேபோல கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே விவசாய நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிரில் ஊடுபயிராக ரூ.30 லட்சம் மதிப்புள்ள கஞ்சா செடிகளை வளர்த்த விவசாயி கண்ணன் (50) என்பவர் போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா செடிகள், வேரோடு பிடுங்கி அழிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி (வயது 25). இவரது வீட்டின் பின்புறம் குளிக்கும் இடத்தில் பிளாஸ்டிக் குடத்தை வெட்டி பூந்தொட்டி போன்று மாற்றி, அதில் ஒரு கஞ்சா செடியை வைத்து வீரமணி வளர்த்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் வீரமணி வீட்டிற்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அவர் கஞ்சா செடி வளர்த்தது, தெரியவந்தது. சுமார் 5 அடி உயரத்திற்கு வளர்ந்துள்ள அந்த செடி, 4 மாதமாக வளர்க்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் பூந்தொட்டியுடன் கஞ்சா செடியை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.
இதேபோல கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே விவசாய நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிரில் ஊடுபயிராக ரூ.30 லட்சம் மதிப்புள்ள கஞ்சா செடிகளை வளர்த்த விவசாயி கண்ணன் (50) என்பவர் போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா செடிகள், வேரோடு பிடுங்கி அழிக்கப்பட்டது.