உள்ளூர் செய்திகள்
ராஜபாளையத்தில் சித்திரை திருவிழா நடந்தது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்ட ஷத்திரிய ராஜுக்கள் சமூகத்தினர்வசித்து வருகின்றனர். இவர்கள் சித்திரைதிருவிழா அன்றும் தமிழ்புத்தாண்டு தினத்தை கொண்டாடி வருகிறார்கள்.
இந்தஆண்டு ஷத்திரிய ராஜூக்கள் பாரம்பரியஉடை அணிந்து வாணவேடிக்கைகள் முழங்க, அலங்கரிக்கப்பட்ட யானை முன் செல்ல வீதி உலா நடந்தது. மாயூரநாத சுவாமி கோவிலில் இருந்து நீர் காத்த அய்யனார் பூர்ணாம்பாள், புஷ்கலாம்பாள் சமேதராய் யானை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா கொண்டு வரப்பட்டது. மூஞ்சூறு வாகனத்தில் விநாயகரும், குதிரை வாகனத்தில் அருள்மிகு ஓட்டக்கார சுவாமியும் முன்செல்ல, கோவில் காளை அலங்கரிக்கப்பட்டு, பாரம்பரிய உடையணிந்த ஷத்திரிய ராஜுக்கள் சமூகத்தினர், இளைஞர்கள் ஊர்வலமாய் அணிவகுத்து வந்தனர்.
கேரள செண்டை மேளம், பாண்டு வாத்திய குழுவினர் மற்றும் நாதஸ்வரம் முழங்க வீதி உலா கொண்டுவரப்பட்டது. மதுரை சாலை வழியாக பழைய பஸ்நிலையம், தென்காசி சாலை வழியாக காந்தி சிலை ரவுண்டானாவில் இருந்து முடங்கியார் சாலை வழியாக பழையபாளையம் என்.ஆர்.கிருஷ்ணராஜா மண்டபத்தை சென்றடைந்து அங்கு ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.