உள்ளூர் செய்திகள்
நெல் கொள்முதல் செய்யும் பணி தொடங்கியது.

நேரடி நிலையங்களில் நெல் கொள்முதல் தொடக்கம்

Published On 2022-01-24 02:03 GMT   |   Update On 2022-01-24 02:03 GMT
பாபநாசம் தாலுகாவில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யும் பணி தொடங்கி உள்ளது.
மெலட்டூர்:

பாபநாசம் தாலுக்கா, அன்னப்பன்பேட்டை, மெலட்டூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சம்பா பருவத்தில் சாகுபடி செய்த நெற்பயிர்கள் அறுவடை பருவத்தை எட்டியுள்ளதால் விவசாயிகள் நெற்பயிர்களை அறுவடை 
செய்யும் பணியை கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி விட்டனர். 

அன்னப்பன்பேட்டை, மெலட்டூர் அரசு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை 
விற்பனை செய்ய அரசு கொள்முதல் நிலையங்கள் முன்பும், 
சாலையோரமும் கொட்டி வைத்து ஒரு வார காலமாக காத்து கிடந்தனர். 

இன்னும் சில விவசாயிகள் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் அறுவடை பருவம் தாண்டியும் நெற்பயிர்களை அறுவடை செய்யாமல் இருந்தனர்.
 
அதனால் அன்னப்பன்பேட்டை மற்றும் மெலட்டூர் அரசு கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து, நெல் கொள்முதல் செய்யும் 
பணியை விரைவில் தொடங்க வேண்டுமென விவசாயிகள் 
வலியுறுத்தி வந்தனர். 

இந்த கோரிக்கையை ஏற்று அன்னப்பன்பேட்டை, மெலட்டூர் அரசு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் 
செய்யும் பணி தொடங்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
Tags:    

Similar News