ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
கோணாங்குப்பம் புனித பெரியநாயகி அன்னை ஆலய தேர் பவனி

கோணாங்குப்பம் புனித பெரியநாயகி அன்னை ஆலய தேர் பவனி

Published On 2022-01-20 04:12 GMT   |   Update On 2022-01-20 04:12 GMT
கோணாங்குப்பம் புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தில் தினந்தோறும் சிறப்பு திருப்பலியும், சிலுவை பாதையும் நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கோணாங்குப்பம் கிராமத்தில் புகழ்பெற்ற புனித பெரியநாயகி அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் ஆண்டு பெருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பெருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு திருப்பலியும், சிலுவை பாதையும் நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது.

இதையொட்டி நேற்று காலை 7.30 மணிக்கு கூட்டு திருப்பலி நடைபெற்றது. இரவு 9 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடந்தது. அப்போது பாரம்பரிய முறைப்படி பாளையக்காரர், ஜமீன் அலங்கார உடையில் முகாசபரூரில் உள்ள தனது வீட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பெரியநாயகி அன்னை ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு பங்குதந்தை தேவ.சகாயராஜ் தலைமையிலான குழுவினர் வரவேற்பளித்தனர். இதையடுத்து தேர்பவனியை பங்கு தந்தையர்கள், பாளையக்காரர் பொன் வீரசேகர வேலுசாமி கச்சிராயர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தேர் பவனியானது ஆலயத்தை சுற்றி வலம் வந்தது.

இதில் மாவட்ட கவுன்சிலர் ஆர்.ஜி.சாமி, ஒன்றிய கவுன்சிலர் சாந்தி மதியழகன் மற்றும் ஆலய ஊழியர்கள், விழாக்குழுவினர், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆலயங்களில் வழிபட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், பொதுமக்கள், கிறிஸ்தவர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் தேர்பவனி களையிழந்து காணப்பட்டது.
Tags:    

Similar News