உள்ளூர் செய்திகள்
குண்டும், குழியுமாக உள்ள சாலை.

சாலையை புதுப்பிக்க கலெக்டருக்கு கோரிக்கை

Published On 2022-01-24 09:42 GMT   |   Update On 2022-01-24 09:42 GMT
உடன்குடிஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீர்காட்சி ஊராட்சி மன்றத்தில் இருந்து மறவன்விளைவழியாக திருச் செந்தூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அதனை புதுப்பிக்க கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
உடன்குடி:

உடன்குடிஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீர்காட்சி ஊராட்சி மன்றத்தில் இருந்து மறவன் விளைவழியாக திருச்செந்தூர் செல்லும் சாலை  குண்டும் குழியுமாகவும், பல இடங்களில் சாலை இல்லாமலும் உள்ளது. 

உடன்குடி சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மக்கள் திருச்செந்தூருக்கு செல்வதற்கு இந்த சாலையைத்தான் அதிகமாக பயன்படுத்துவார்கள்.

 பஸ், லாரி மற்றும் கனரக வாகஙைகள் போக்குவரத்து இல்லாத இந்த சாலையை அதிகமாக பயன்படுத்தும் இருசக்கர, 3 சக்கர, 4 சக்கர வாகன ஓட்டிகள் சுமார் 30 நிமிடத்தில் உடன்குடியில் இருந்து திருச்செந்தூர் சென்று விடுவார்கள்.

அதனால் இந்த சாலையை உடனடியாக புதுப்பிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் சார்பில் அதன் நிறுவனர் முகைதீன், மாவட்ட கலெக்டர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
Tags:    

Similar News