ஆன்மிகம்
சென்னகேசவ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

சென்னகேசவ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

Published On 2021-04-23 04:54 GMT   |   Update On 2021-04-23 04:54 GMT
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சென்னகேசவ பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்ன கேசவ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ தேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோவிலில் ஸ்ரீராமநவமி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், வழிபாடும் நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று இரவு கோவில் வளாகத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்ன கேசவ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. விழாவையொட்டி பல்வேறு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News