செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-07-28 14:33 GMT   |   Update On 2021-07-28 14:33 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28 ஆயிரத்து 34 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்து 25 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 289 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 382 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 363 ஆக உள்ளது.
Tags:    

Similar News