செய்திகள்
கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

தேவர் ஜெயந்தியை சிறப்பாக கொண்டாட வேண்டும்-பார்வர்டு பிளாக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

Published On 2021-10-08 08:21 GMT   |   Update On 2021-10-08 08:21 GMT
வரும் 10-ந்தேதி காலை திருப்பூர் மண்ணரையில் நடைபெறும் 7-வது மாவட்ட டி.யு.சி.சி. தொழிற்சங்க மாநாட்டை சிறப்பாக நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனுப்பர்பாளையம்:

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் டி.யு.சி.சி. தொழிற்சங்க மாவட்ட மாநாடு மற்றும் தேவர் ஜெயந்தி தொடர்பான ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாநகர் மாவட்ட கட்சி தலைமை அலுவலகத்தில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணை தலைவர் எஸ்.கர்ணன் தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர் ரமேஷ், மாநகர செயலாளர் காளீஸ்வரன், மாநில குழு உறுப்பினர் மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரும் 10-ந்தேதி காலை திருப்பூர் மண்ணரையில் நடைபெறும் 7-வது மாவட்ட டி.யு.சி.சி. தொழிற்சங்க மாநாடு மற்றும் வரும் 30-ந்தேதி நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் மாவட்ட தொழிற்சங்க பொதுச்செயலாளர் பாண்டி, பல்லடம் ஒன்றிய பொது செயலாளர் தனசேகர், மாவட்ட பொருளாளர் சுப்புராம், துணைத்தலைவர் ரவி மற்றும் நிர்வாகிகள் பிரபு, சங்கர், ராஜேஷ், மொக்கமாயன், மவுனகுரு, படையப்பா, பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News