செய்திகள்
கோடை வெயில்

அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம்

Published On 2021-04-29 08:17 GMT   |   Update On 2021-04-29 13:17 GMT
தமிழக உள்மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக நிலவிய அதிகபட்ச வெப்பநிலை அடுத்து வரும் 3 நாட்களுக்கு இயல்பை விட 1 முதல் 3 டிகரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.
சென்னை:

தென் தமிழகம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள் மதுரை, கரூர், சேலம், நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை முதல் 2-ந் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். 3-ந் தேதி மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.



தமிழக உள்மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக நிலவிய அதிகபட்ச வெப்பநிலை அடுத்து வரும் 3 நாட்களுக்கு இயல்பை விட 1 முதல் 3 டிகரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.

கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 5 டிகிரி செல்சியல் வரை அதிகமாக உணரப்படும்.

இதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாக இருக்கும். இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட் டத்துடன் காணப்படும். காற்றில் ஒப்பு ஈரப்பதம் உள்ளதால் வெக்கையும், வியர்வையும் அதிகமாக இருக்கும்.

மேற்கண்ட தகவலை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News